Tamilசெய்திகள்

4ம் வகுப்பு மாணவனை கொலை செய்து கண்களை பிடிங்கி எடுத்துச் சென்ற கொடூரம் – ஆந்திராவில் பரபரப்பு

ஆந்திரா மாநிலம், ஏலூர் மாவட்டம், மறுமுலாவை சேர்ந்தவர் கோகுல ஸ்ரீனிவாச ரெட்டி. இவர் தன்னார்வலராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராமலட்சுமி. இவரது மகன்கள் ஹர்ஷவர்தன் ரெட்டி மற்றும் அகில்வர்தன் ரெட்டி (வயது 9). அலிரமூடு கூடமில் உள்ள பழங்குடியினர் நல விடுதியில் தங்கி அங்குள்ள பள்ளியில் ஹர்ஷவர்தன் ரெட்டி 6-ம் வகுப்பும், அகில்வர்தன் ரெட்டி 4-ம் வகுப்பு படித்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு மாணவர்கள் அனைவரும் உணவு சாப்பிட்டுவிட்டு தங்களது அறைகளில் தூங்கினர். நள்ளிரவு மர்ம நபர்கள் அகில்வரதன் ரெட்டி அறைக்குள் புகுந்தனர். தூங்கிக் கொண்டிருந்த அவரை தூக்கிக் கொண்டு வெளியே சென்றனர்.

பின்னர் கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்தனர். அவரது 2 கண்களை கத்தியால் குத்தி பிடுங்கினர். மாணவனை கொலை செய்த பின்னர் அவர் படிக்கும் பள்ளி வளாகத்தில் பிணத்தை வீசி விட்டு கண்களை எடுத்து சென்றனர். நேற்று காலை அகில்வர்தன் ரெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்ட மாணவர்கள் இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் சிங்கங்க ராஜூக்கு தகவல் தெரிவித்தார். அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மோப்பநாய் கொண்டு சோதனை நடத்தினர். அது மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மாணவனின் பிணத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஏலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவனின் கண்களை எடுக்க கொலை செய்தார்களா? அல்லது அகில்வர்தன் ரெட்டி சக மாணவர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.