Tamilசெய்திகள்

4000 எம்.பிக்களுடன் மோடி மீண்டும் பிரதமர் ஆவார் – பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பேச்சு

பீகார் மாநிலத்தில் பிரதமர் மோடி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அதில், அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாரும் கலந்து கொண்டார்.

அங்கு பேசிய நிதிஷ்குமார், வரும் பாராளுமன்ற தேர்தலில், 4000 எம்.பி.க்களுடன் மீண்டும் பிரதமராகும் மோடிக்கே மக்கள் தங்கள் வாக்குகள் அனைத்தையும் அளிப்பார்கள் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வரும் தேர்தலில் 400 இடங்களில் வெல்வதே பாஜகவின் இலக்கு என்று பிரதமர் கூறி வரும் நிலையில், 4000 எம்.பிக்கள் என்று நிதிஷ்குமார் பேசியது சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு உள்ளாகி உள்ளது.