மக்களை சந்தித்து அவர்களின் தேவைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – திமுக எம்.பிகளுக்கு முதலமைச்சர் உத்தரவு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க.வை சேர்ந்த எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எம்.பி.க்களுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தார். அதில்,
* பாராளுமன்றம் கூடும் நாட்கள் தவிர வாரத்தில் குறைந்தது 4 நாட்கள் தொகுதியில் தங்கி மக்கள் பணியாற்ற வேண்டும்.
* மக்களை சந்தித்து அவர்களின் தேவைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* தங்கள் தொகுதிகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் கலந்துகொள்ள வேண்டும். முகாம்களில் கலந்துகொண்டு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.
* தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
* சட்டசபை தேர்தலில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் வெற்றிக்கு கடுமையாக பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
