Tamilசெய்திகள்

தொடர்ந்து உயரும் தங்கம் விலை – ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்திற்கு விற்பனை

சென்னையில் இன்று காலை ஆபரணத்தங்கம் விலை உயர்ந்த நிலையில் தற்போது மீண்தும் தங்கம் விலை உயர்ந்தது.

ஆபரணத்தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,400 உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று காலை ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் ரூ.520 உயர்ந்தது. அதன்படி, 22 காரட் தங்கம் விலை கிராம் ரூ.11,125க்கு விற்பனையாகிறது.

இன்று காலை ஒரு சவரன் ரூ.88,480க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 89,00க்கு விற்பனையாகிறது.