Tamilசெய்திகள்

தமிழகத்தில் விலைவாசி உயர்வுக்கு என்ன காரணம் ? – உணவு வழங்கல் துறை அமைச்சர் சட்டசபையில் விளக்கம்

தமிழகத்தில் விலைவாசி உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, விலைவாசி உயர்வு குறித்து அமைச்சர் வெங்கடரமணன் பேசியதாவது, “ஈரான் போர், பெட்ரோல் – டீசல் விலையால்தான் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. சர்க்கரையின் விலையானது, தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் அதிகரித்துள்ளது. அதிகம் உற்பத்தி செய்யப்படும் மகாராஷ்டிரத்திலும் சர்க்கரையின் விலை உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் அரிசி, சர்க்கரை, வெங்காயம், உருளைக் கிழங்கு உள்ளிட்ட 41 பொருள்களின் விலையை நாள்தோறும் கண்காணித்து வருகிறோம். மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் சென்றடைவதையும் தட்டுப்பாடு ஏற்படக் கூடாது என்பதிலும் பெரும் முனைப்புடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விலை கண்காணிப்பு கமிட்டியில், வாராவாரம் எந்தெந்த பொருள்களின் விலை அதிகமாக உள்ளது, அவற்றை எப்படி கட்டுப்படுத்தலாம், பண்டிகை காரணங்களால் விலை உயர்வா, ஈரான் போர்தான் காரணமா, விளைச்சல் குறைவால்தான் காரணமா என அனைத்து கோணங்களிலும் கண்காணித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.