Tamilவிளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் – அடுத்த 2 போட்டிகளில் விராட் கோலி விளையாட மாட்டார்?

இந்தியா வந்த இங்கிலாந்து அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்டில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில், 2-வது டெஸ்டில் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்று சமன் நிலையில் உள்ளது.

இந்நிலையில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத விராட் கோலி அடுத்து வரும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கோலி அடுத்த 3 போட்டிகளில் விளையாடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் விளையாடாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இரு அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 15-ந் தேதி நடைபெறுகிறது.