Tamilசெய்திகள்

சிக்னல் கோளாறு காரணமான சென்னையில் மின்சார ரெயில்கள் நிறுத்தம்

சென்னை புறநகர் மின்சார ரெயில்கள் சிக்னல் கோளாறு காரணமாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. இரும்புப் பாதை சிக்னல் பழுது காரணமாக ரெயில்கள் நிறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரக்கோணத்தில் இருந்து திருவள்ளூர் வழியாக சென்னை சென்ட்ரல் வரை செல்லும் மின்சார ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது. ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் சென்னைக்கு வேலைக்கு வரும் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.