Tamilசினிமா

செல்வராகவன் ஹீரோவாக நடிக்கும் ‘பகாசூரன்’ படப்பிடிப்பு தொடங்கியது

’பழைய வண்ணாரப்பேட்டை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பிறகு இவர் இயக்கிய ’திரெளபதி’ ‘ருத்ரதாண்டவம்’ ஆகிய படங்கள் நல்ல
வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கும் அடுத்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும் நட்டி நட்ராஜ் முக்கிய
கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டை இயக்குனர் மோகன் ஜி அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பது, முத்துமலை முருகன் அருளுடன்
இன்று இனிய பூஜை நடைபெற்றது. அடுத்த படத்தின் தலைப்பு ’பகாசூரன்’. திங்கள் முதல் படப்பிடிப்பு ஆரம்பம் என்று பதிவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு சமூக வலைத்தளத்தில் வைரலாகி
வருகிறது.