Tamilசினிமா

நகை திருட்டு குற்றவாளி திருவாரூர் முருகன் வாழ்க்கை சம்பவங்கள் தான் கார்த்தியின் ‘ஜப்பான்’ படத்தின் கதையா?

பருத்திவீரன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, மெட்ராஸ், கைதி, சர்தார் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் கார்த்தி. இவர் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன்-2 படத்தில் நடித்திருந்த வந்தியத்தேவன் கதாப்பாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தற்போது கார்த்தி குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கதில் ‘ஜப்பான்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ‘துப்பறிவாளன்’, ‘நம்மவீட்டு பிள்ளை’ போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ‘ஜப்பான்’ படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் பெரும் நகை திருட்டில் ஈடுபட்ட பிரபல குற்றவாளியான ‘திருவாரூர் முருகன்’ வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் கற்பனையான தழுவல் என்று கூறப்படுகிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி-யில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட செட்டில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.