Tamilசெய்திகள்

வேலூர் மாவட்ட கல்வி அலுவர் சஸ்பெண்ட் – பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேச பிரபாவை சஸ்பெண்ட் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தேர்வு பணிகளில் சுணக்கமாக இருந்ததால் கல்வித்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

தேர்வு பணிகளில் சுணக்கமாக இருந்தாலோ, முறைகேடுகளுக்கு உடந்தை போனாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத் துறை இயக்குனர் சேதுராம வர்மா எச்சரிக்கை விடுத்துள்ளார்.